
“காகம்” என்பது சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதற்கும், தன் இனத்தை ஒன்று சேர்த்து மகிழ்வதற்கும், அறிவுக்கூர்மைக்கும் பெயர் பெற்ற ஒரு பறவை ஆகும். இதே போலத் தான் இந்தக் காகமும் செயற்பட இருக்கிறது.
மக்களின் அரசியற் தெளிவின்மையே 2009 இற்குப் பின்னர் தமிழர்தேசத்தில் புரையோடியிருக்கும் கட்டுப்பாடற்ற, கட்டமைப்பற்ற செயற்பாடுகளுக்குக் காரணம் என்பது காகத்தின் கணிப்பு.
இன்று ஈழத்தில் தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் நிருவாகச் செயற்பாட்டுவெளி ஆகியன ஒரு கட்டுப்பாடற்ற, முதிர்ச்சியற்ற, ஆழ்ந்த தெளிவற்ற தன்மைகளோடு சிதைவடைந்து காணப்படுகிறது. இப்படியான நிலையில், தமிழீழதேசத்தின் விடுதலைக்கான அரசியலை முன்னெடுப்பது என்பது வாய்ப்பற்றதொன்றாக இருக்கின்றது. எனவே, அதைச் சீரமைக்க வேண்டிய தேவை என்பது காலத்தின் கட்டாயம். இந்தக் கட்டாயக் கடமையைக் “காகம்” செய்யும்.
ஈழத்தில் தமிழ்த்தேசிய அரசியல், அறிவியல், பொருண்மியம், கலை, இலக்கியம் உள்ளிட்ட அலகுகளை ஆழமான முறையில் எமது மக்களுக்கு விளங்கப்படுத்தி, அதனூடாகப் பொது எதிரியை நோக்கி மக்களைச் சரியான முறையில் கட்டமைப்பதே எமது நோக்கம்.
ஒன்றாகச் சேருவோம்! ஒன்றிற்காகச் சேருவோம்!
Be the first to comment