தமிழர் தாயகத்தில் இன்னுமொரு காத்தான்குடி உருவாவதைத் தடுப்போம் -சேனையூர் நந்தன்-

ஏற்கனவே காகத்தில் சோனகர்களும் தமிழ் இசுலாமியர்களும் வேறு வேறானவர்கள் என்றும், இன்று அடிப்படைவாதத் தமிழ் இசுலாமியர்கள் அரசியல் பிழைத்துப்போய்த் தங்களைச் சோனகர்களாக மடைமாற்றம் செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த இணைப்பிற் (http://www.kaakam.com/?p=1441) சென்று ஏற்கனவே வெளியாகிய கட்டுரையைப் படிக்கவும்.

சன்னி, சியா என இரு பெரும் பிரிவுகளைக் கொண்ட இசுலாமிய மதமானது வளைகுடா நாடுகளில் தங்களுக்குள் மாந்த வேட்டையில் இறங்கி “அல்லாவின்” பெயரால் மாறி மாறி நூறாயிரக்கணக்கான உயிர்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தவண்ணம் உள்ளனர். அது போக “குர்ஆன்” நூலும் தத்தமது நோக்கத்திற்கேற்றவாறு விளக்கப்பட்டு, முசுலீம் அல்லாத சமூகத்தோடு விரிசலை ஏற்படுத்தி அதன் விளைவாகப் பல நாடுகளில் முசுலீம் அல்லாத மாந்த உயிர்களையும் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர்.

மொகாலயப் படைகள் இந்திய துணைக் கண்டத்திற்குள் நிலங்களை வன்கவர்ந்து இசுலாமல்லாத மதச்சின்னங்களைச் சிதைத்து, வன்முறையினால் இசுலாத்தைப் பரப்பி நூற்றாண்டு கால ஆட்சியை நடத்தியிருந்தாலும் இந்தியத்துணைக்கண்டத்தின் தெற்கேயிருந்த மன்னர்களால் மொகாலயக் கும்பல் விரட்டியடிக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழர்களின் மரபார்ந்த அடையாளங்கள் பல மொகாலய இசுலாமியக் கும்பல்களிடம் இருந்து பாதுகாக்கபட்டது. மொகாலய இசுலாமிய வன்வகவர்வினுள் சிக்குண்ட இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்த தேசிய இனங்கள் பல தமது வரலாற்று அடையாளங்களைத் தொலைத்துள்ள நிலையில் துணைக்கண்டத்தின் தெற்கே குறிப்பாகத் தமிழ்நாட்டில் மரபார்ந்த அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவெளியில் இசுலாமியர்கள் சொல்வது போல் இசுலாம் ஒன்றும் அமைதியை விரும்பும் மார்க்கம் அல்ல. ஆங்கிலேயர்கள் எப்படி நிலங்களைக் கைப்பற்றி வன்முறையால் தமது கிருத்துவ மதத்தைத் திணித்தனரோ அதற்கு முன்னதாகவே மொகலாயர்கள் மிகக் கொடூரமான முறையில் இசுலாமியத் திணிப்பைச் செய்திருக்கிறார்கள்.

இனி விடயத்திற்கு வருவோம்.

கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் இசுலாமியத் தீவிரவாதக் கும்பலினால் கிருத்துவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதைத் தொடர்ந்து சம்மாந்துறையில் இசுலாமியத் தீவிரவாதக் கும்பல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதும் பெரும் அரசியல் நெருக்கடியை இலங்கைத்தீவில் ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமல்லாது தமிழர் தாயகத்தில் ஊடுருவியிருக்கக் கூடிய இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்கள் குறித்தும் பல தகவல்கள் வெளிவரக் காரணமாக மாறியிருக்கிறது.

தப்லீக், தௌகீத், சூபிசம், வகாபிசம், ஜமாஅத் இசுலாமி என்று பல இசுலாமியக் கும்பல்கள் அரபு நாடுகளின் கொழுத்த பணப் பின்புலத்துடன் தமிழர் தாயகத்தில் திரைமறைவில் பாரிய இராணுவப்பாங்கிலான அணியப்படுத்தல்களில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இசுலாம் மதத்தைப் பின்பற்றும் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் தமிழர்களாக இருந்தும் இசுலாமியரல்லாத தமிழர்களுடனான இவர்களின் உறவானது புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதிகளின் அரசியல் மற்றும் பொருண்மிய வலிமைக்கு முன்னால், தங்களைத் தமிழ் இசுலாமியர்களாக அடையாளங்காட்ட முடியாதவாறு இயல்புத்தன்மையுடைய இசுலாமியர்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தென்தமிழீழத்தில் இசுலாமிய ஊர்காவல் படைகளின் தமிழர்கள் மீதான நரபலிவெறியாட்டங்களைத் தொடர்ந்து காத்தான்குடிப் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட படுகொலையை வைத்துத் தமிழர்களை ஒருவித குற்றவுணர்வுக்குள்ளாக்குவதை முதன்மை நோக்காகக் கொண்டு, படுகொலை நிகழ்வினை நினைவுச் சின்னமாக்கி அதை இசுலாமியரல்லாத தமிழர்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்தெடுக்கும் அளவில் விரிவுபடுத்திய இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்கள், திரைமறைவில் பாரிய வன்கவர்வுத் திட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள் என்பது இன்று வெளியுலகிற்குத் தெரியவந்திருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரைத் தனிமைப்படுத்தி, அதை முசுலீம்களின் கூடாரமாகச் சிறுகச் சிறுக இசுலாமிய அடிப்படைவாதிகள் கட்டியமைத்திருக்கிறார்கள். சட்டத்திற்கு முரணான முறையில் குடியிருப்புகளை ஏற்படுத்தி, உள்ளூர் அரச நிருவாகக் கட்டமைப்புகளால் நெருங்க முடியாத அளவிற்குத் தமது அரசியல் மற்றும் பொருண்மிய வலுவைப் பயன்படுத்திக் காத்தான்குடியைத் தனி ஆட்சிப்புலம் போல மாற்றியிருக்கிறார்கள். அதாவது காத்தான்குடியில் காணப்படும் அல்லது காத்தான்குடியைக் கையாளும் உள்ளூராட்சி மன்றங்கள், அரச நிருவாகங்களில் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிபுரியும் நிலையை உருவாக்கிக் காத்தான்குடியைச் செவ்வனே முசுலீமுகளின் அடிப்படைவாதக் கூடாரமாகவும் இசுலாமல்லாத தமிழர்களிற்கு எதிரான முகாமாகவும் மாற்றியமைத்திருக்கிறார்கள். காத்தான்குடியின் பாதுகாப்பிற்காக, காத்தான்குடியின் எல்லை ஊர்களானவை இசுலாமியர்களால் வலுவந்தமாக வாங்கப்பட்டிருக்கிறது. பூனைச்சேனை மற்றும் ஆரையம்பதியைச் சேர்ந்த பல ஏக்கர் நிலப்பரப்புகள் இசுலாமியர்களால் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலங்களில் வாழ்ந்த இசுலாமியரல்லாத தமிழர்கள் தொடர்ச்சியான தொல்லைகளுக்குட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

காத்தான்குடியின் கட்டுமானங்கள் குறித்துக் கிழக்கு மாகாண மக்களால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத அளவு வலுவ‌ற்ற அரசியற் தரப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டிருக்கிறார்கள்.

காத்தான்குடியில் சவுதி மற்றும் ஈராக்கியக் குழுக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் பணத்தில் “சுனி” பண்பாட்டைப் பட்டெறியும் கட்டிடங்களும் ஈரானிய மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் பணத்திலிருந்து “சியா” பண்பாட்டைப் பட்டெறியும் கட்டிடங்களும் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. கட்டடங்கள் மட்டுமல்லாது அதன் தொடர்ச்சியாக மாந்தகுலத்திற்கே எதிரான மிக மிக மோசமான வகாபிசம், ஜிகாத்திசம் போன்றவை இசுலாமியர்களிடத்தில் தீவிரமாகப் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதத்தின் பெயரால் அரேபிய மற்றும் பாரசீகப் பேரரசுகளின் எச்சங்களைத் தமிழர் தாயகத்திற்குள் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் காத்தான்குடி இசுலாமிய அடிப்படைவாதிகள்.

காத்தான்குடியின் அரசியல் மற்றும் பொருண்மிய வலுவானது சிறிலங்கா வாழ் முசுலீம்களுக்கிடையில் பெரும் எழுச்சியை உண்டாக்கியது மட்டுமல்லாது தமிழர்தாயத்தில் இசுலாமியரல்லாத நிலப்பகுதிகளை வன்கவர்ந்து இசுலாமியக் குடியிருப்புகளை வலுவந்தமாக ஏற்படுத்தித் தமிழர்களிடையில் சமயத்தின்பால் பிரிவினைகளை ஏற்படுத்தவும் உந்துவிசையாக இருந்திருக்கிறது.

1990 களில் வடக்கு வாழ் தமிழ் இசுலாமியர்களுக்கு இசுலாமியரல்லாத தமிழர்களுடன் இணைந்து வாழ முடியாத விரும்பத்தகாத சூழல் உருவாகியதைத் தொடர்ந்து இசுலாமியர்கள் மீது ஏற்பட்ட பரிவுணர்வின் அலையினை காப்பரணாகவும், காத்தான்குடிச் சூழ்ச்சியினை வலுவாகவும் வைத்துக்கொண்டு இசுலாமிய அரசியல்வாதிகள் மற்றும் அடிப்படைவாத அமைப்புகள் படிப்படியாகத் தமிழர்தாயகத்தின் ஏனைய பகுதிகளிலும் தமது இசுலாமிய அடிப்படைவாத விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் திரைமறைவில் பாரிய வன்கவர்வுத் திட்டங்களை இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாத முன்னெடுப்புகள் இடம்பெற்றுவரும் அதே வேளையில், மிக இரகசியமாகப் பல நூறு இசுலாமியப் பள்ளிவாசல்களும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டப்படும் பள்ளிவாசல்கள் எந்தெந்த‌ இசுலாமியக் குழுக்களினது என்பது தொடர்பிலான‌ எந்தவொரு தகவல்களும் இல்லாமல் மிகச் சிறப்பாக ஊடக மறைப்புச் செய்யப்பட்டு வருகிறது. மன்னாரில் கட்டங் கட்டமாக ஏற்படுத்தப்பட்டுவரும் இசுலாமியக் குடியிருப்புகளுக்கு அரேபியப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

இசுலாமியரல்லாதோரை உள்வாங்காமல் மிகச் சிறப்பாக அரசியற் செல்வாக்குடன் பல காத்தான்குடி வகையிலான ஊர்கள் வடக்கில் மிகத் தீவிரமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

எண்ணிக்கையில் மிகச் சிறய அளவிலான இசுலாமியர்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் குறுகிய பிதேசத்திற்குள் ஏராளமான பள்ளிவாசல்கள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பள்ளிவாசலின் கட்டமைப்பும் ஒவ்வொரு வடிவிலானவை. அவை ஒவ்வொரு இசுலாமியக் குழுக்களின் தனிப்பாங்கைப் பட்டெறிபவை.

2015 காலப்பகுதிகளில் யாழ் முசுலீம் குழுவிற்கும் சிறிலங்கா தவுகீத் யமாத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தவுகீத் யமாத் என்று சொல்லக் கூடிய இசுலாமிய அடிப்படைவாதக் குழு தனது யாழ் மாவட்டச் செயற்பாட்டைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. அரபுப் பாடசாலைகள் உருவாக்கம், பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் தீவிரம் எனப் பல வழிகளிலும் யாழ்மாவட்டத்திற்குள் ஊடுருவியிருக்கிறது இசுலாமிய அடிப்படைவாதம். மட்டக்களப்பில் ஒரு காத்தான்குடி போல், யாழ்மாவட்டத்தில் பொம்மைவெளியை அண்டிய பிரதேசத்தை உருவாக்கி, நெரிசலான, இசுலாமியரல்லாதோர் உள்நுழைய முடியாத வகையிலான ஒரு இசுலாமிய ஊரை உருவாக்கும் முயற்சி பல வழிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரண்டு மாதங்களிற்கு முன்னர் ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 அகவை மதிக்கத்தக்க இசுலாமியர் ஒருவர் இன்னொரு இசுலாமியரல்லாத தமிழருடன் சேர்ந்து வார இறுதியில் கள்ளுக் குடிப்பதைப் பழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மட்டக்களப்பிலிருந்து வந்த இசுலாமிய அடிப்படைவாதக் கும்பலொன்று அந்த இசுலாமியரை மிரட்டியது மட்டுமில்லாது அவரின் குடும்பப் பெண்களையும் மிரட்டி, இசுலாமிய மார்க்கத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் படியும் இல்லாவிடில் மிகக் கேவலமாக, சமூகத்தில் நடமாட முடியாத‌ படியாக மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்கின்றனர். பதின்ம அகவையை எட்டிய அவரின் பேரப்பிள்ளைகள் “புர்க்கா” அணியும்படி வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வை அவர் பின்வருமாறு தனது நண்பரிடம் வெளிப்படுத்தியிருந்தார் “இதென்ன சவுதியா? இது யாழ்ப்பாணம், இது தமிழர் தேசம், நான் தமிழ் முசுலீம் இவங்கள் யாரு என்னைக் கள்ளுக் குடிக்கக் கூடாது என்று சொல்ல, இவங்கள் யாரு என்ர பேத்திக்கு புர்காவ திணிக்க”. இது ஒரு தனிநபரின் இயலாமை. அவரின் நல்ல காலத்திற்கு இசுலாமிய அடிப்படைவாதிகளின் மீது இப்போது மக்களின் பார்வை விழுந்திருப்பதால் அவர் அந்த அடிப்படைவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்திருப்பது மட்டுமல்லாது அவரின் பேத்திகளும் இசுலாமியரல்லாத நண்பிகளுடன் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்கள்.

ஊடகங்களின் பார்வையிலோ, உள்ளூர் அரசியல்வாதிகளின் பார்வையிலோ சிக்காமல் இசுலாமிய அடிப்படைவாதிகள் தமிழர்தாயகத்திற்குள் மிகத் தீவிரமாக ஊடுருவி வருவதை இயல்புத்தன்மையுடைய தமிழ் இசுலாமியர்கள், இசுலாமியரல்லாத தமிழர்களுடன் இணைந்து தடுக்க வேண்டும். சட்டத்திற்கு முரணாக, குடியிருப்பு நெறிமுறைகளுக்கு முரணாக உருவாக்கப்படும் குடியிருப்புகள் மற்றும் அடிப்படைவாத வழிபாட்டு நிலையங்களை எதிர்க்க வேண்டும். இசுலாமியர்களிடத்தில் முசுலீம் என்பது ஒரு இனமல்ல நாமெல்லாம் தமிழ் இசுலாமியர்கள் என்ற சிந்தை விதைக்கப்பட வேண்டும்.

தமிழர்தாயகத்தில் காணப்படும் அரச கட்டமைப்புகளில் பணியிருப்பவர்கள் இனிமேலாவது மண்பற்றுடன் செயற்பட வேண்டியது மிக மிக இன்றியமையாததாகிறது. பொருண்மிய வலுவோ அல்லது அரசியல் வலுவோ பெருமளவில் கிடைக்கப் பெறாத இசுலாமியரல்லாத தமிழ்ச் சமூகம், இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்கள் குறித்து விரும்பியோ விரும்பாமலோ மிக விழிப்புடன் இருத்தல் இன்றியமையாததாகிறது. மதத்தின் பெயரால் தமிழர் கட்டடக்கலைகளை மழுங்கடித்து ஏற்படுத்தப்படும் புதிய கட்டடங்கள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருத்தலும் அவற்றை முற்றுமுழுதாக எதிர்த்தலும் இன்றியமையாததாகிறது.

வழிபாட்டிடங்கள் தவிர்ந்த பொது இடங்களில் இசுலாமியர்கள் கூட்டமாகவோ தனியாகவோ நின்று தொழுகை செய்வதை முழுமையாகத் தடைசெய்வதோடு எச்சரிக்கப்படவும் வேண்டும்.

இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகத் தமிழ் இசுலாமியர்கள் ஒன்று திரள்வதும் “முசுலீம்” என்பது இனமல்ல நாமெல்லாம் தமிழ் இசுலாமியர்கள் என்ற எண்ணவோட்டத்தின் அடிப்படையிலும் தேசிய இனம் குறித்த புரிதலிலும் தமிழர்களாக இணைந்து வலுவாவதும் தான் இனிவரும் காலங்களில் தமிழினத்தின் இருப்பிற்கும், தமிழ் இசுலாமியர்களின் அச்சுறுத்தலற்ற இயல்பான வாழ்விற்கும், தமிழ்த் தேசிய இன விடுதலைக்கும் இன்றியமையாததாகும்.

-சேனையூர் நந்தன்-

07-06-2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*